Wednesday, September 2, 2020

குடு சந்தா ஹெரோயினுடன் கைது!

தொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸாரினால் குறித்த சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்மணி கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து 26 கிராம் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசிகள் 06 மற்றும் வங்கி ஏரீஎம் அட்டைகள் 10 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் மாளிகாவத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment