Wednesday, September 2, 2020

2015 இல் நடந்ததே மீண்டும் நடக்கிறது...!

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்கள் இன்று தாங்கள் வாக்களித்தமை தொடர்பில் கவலைப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவிக்கின்றார்.

தற்போது நடக்கும் விடயங்களைப் பார்க்கும் போது மீண்டும் 2015 நிகழ்வுகள் நடக்கின்றனவோ எனத் தோன்றுகின்றது. 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, குடும்பவாட்சியை மீண்டும் கொண்டுவந்து, நாட்டை அழித்தொழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருப்பொருளில் இன்று நாட்டின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்ற ரீதியிலேயே அனைத்தும் நடைபெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment