Friday, August 7, 2020

ஐதேகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சஜித் அணியிலிருந்து பாராளுமன்றிற்கு!

ஐக்கிய மக்கள் சக்தியும் தங்களது கட்சியிலிருந்து தேசியப்பட்டியலுக்காக பெயர்களைப் பதிவு செய்துள்ளன.

இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கேற்ப அக்கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் எழுவர் தெரிவாகியுள்ளனர். தோல்வியைத் தழுவிய எந்தவொரு நபரையும் தேசியப்பட்டியலில் அக்கட்சி இடம்பெறச் செய்யவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள பெயர்கள் வருமாறு

திஸ்ஸ அத்தநாயக்க
ஹரீன் பிரனாந்து
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
டயனா கமகே
சிரால் லக்திலக்க
ரஞ்சித் மத்தும பண்டார
மயன்த திசாநாயக்க

No comments:

Post a Comment