Saturday, August 22, 2020

புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை! - டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

13 அரசியல் யாப்பில் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிசெய்து வருவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவதற்கு சிலர் முயன்று வருகின்றனர் எனவும் அமைச்சர் தௌிவுறுத்தினார். அவ்வாறான பிரச்சாரங்கள் பொய்யானவை என்றும் அது தொடர்பில் தான் கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான போலிப் பிரச்சாரங்களால் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது எனவும், இவ்விடயம் தொடர்பில் சிறுபான்மையினர் கருத்திற்கொள்ளக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment