Friday, August 21, 2020

சந்தையில் மஞ்சள் என்ற பேரில் போலி மஞ்சள்! மக்களே அவதானம்!

இந்நாட்களில் சந்தையில் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் துண்டுக்கான தட்டுப்பாடு அதிகளவில் நிலவுவதால், பேரளவில் பலசரக்குப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்ற நிறுவனங்கள் மஞ்சள் தூள் விநியோகிக்க முடியாமல் இருக்கின்ற அதேவேளை, வியாபாரப் பதிவு இல்லாத நிறுவனங்களும் தனியாரும்கூட மஞ்சள் உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த உற்பத்திகளை அரச நிறுவனங்கள் மூலம் பரிசோதித்துப் பார்த்தபோது, அவற்றில் பெரும்பாலானவை சரியான முறையில் உற்பத்தி செய்யவில்லை என்று அறியவருகின்றது.

சில உற்பத்தியாளர்கள் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துவதற்காக மனித உணவு உற்பத்திக்கு ஆகாத இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் பருப்பு, கோதுமை மா என்பவற்றைச் சேர்த்து மஞ்சள் என்ற பேரில் விற்பனை செய்துவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

இந்த இரசாயனப் பொருட்கள் மனிதர்களுக்கு கொடிய புற்றுநோயை உண்டாக்க வல்லவை எனவும் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment