Sunday, March 22, 2020

சாதாரண தர பெறுபேறு வௌியிட காலதாமதமாகும்! பரீட்சைத் திணைக்களம்

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் வௌியிடப்படவிருந்த திகதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிச் செல்வதனால் குறித்த தினத்தில் பெறுபேறுகளை வௌியிடம முடியாதுள்ளது என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் பரீட்சை முடிவுகள் வௌியிடப்படும் என ஏற்கனவே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்திருந்தார். என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு வௌியிடுவதற்கு இயலாது உள்ளதாக தற்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதனாலும், அது தளர்த்தப்பட்டதும் பெறுபேறு வௌியாகும் நாள் பற்றி அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment