Sunday, March 22, 2020

பயணிகள் கப்பல்கள், விமானங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தடை!

அனைத்துப் பயணிகள் கப்பல்கள் மற்றும் வானூர்திகள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்கு அவசரமாக ஆவன செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது இலங்கையையும் கலக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

கொரோனா இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment