Wednesday, March 25, 2020

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா வழிகாட்டிமற்றும் சீனப்பெண் முற்றாக குணமைடைந்திருந்தனர்.

இந்நிலையில் மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதாகவும் 255 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுத் தொடர்பில் பொது மக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறும், சுகாதார அமைச்சு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment