Monday, March 23, 2020

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வங்கிகளை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

இன்று காலை 6மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளையும் திறந்துவைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதற்காக கிளை முகாமையாளர்கள் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை பணியில் அமர்த்த வேண்டும். இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர அவர்கள் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கடமைகளுக்காக சமூகமளிக்கும் வங்கி ஊழியர்கள் கடமைக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி தமது கடமைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment