Monday, March 16, 2020

வைரஸ் சோதனைக்கு செல்லாத நால்வர் கைது!

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா வைரஸ் சோதனைக்கு போகாமல் விமான நிலைய அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி வீடுகளுக்கு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் இரத்தினபுரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விமான நிலையத்தில் இருந்து சோதனைக்கு செல்லாமல் திருட்டுத்தனமாக வீடுகளுக்கு சென்ற 300 பேரை தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

இதேநேரம் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற 21 கொரோனா நோயாளர்களிடையே ஒருவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.எச் மருத்துவமனையின் பிரதான மருத்துவ நிபுணரான மருத்துவர் ஏரங்க நாரங்கொட ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை வெளியிட்டுள்ளார்.

குறித்த நபர் ஏற்கனவே கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த நபருக்கு ஸ்பா எனப்படும் உடல் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்தவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனை உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள 16 அரச மருத்துவமனைகளில் 800க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment