Tuesday, March 24, 2020

கொரோனாவுக்கு எதிரான செயற்பாட்டுக்காக ராஜித்த ஓரிலட்சம் தருகிறார்....

பிறநாடுகளைப் போல் இலங்கையையும் மரண பயத்திற்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரசு தொற்றலிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக பல தனவந்தர்கள் முன்வந்துள்ள நிலையில், கொரோனா தடுப்புக்கு எதிரான நன்கொடை நிதியத்திற்கு தான் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து ஓர் இலட்சம் ரூபாப் பணத்தைத் தருவேன் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனது சொந்த முகநூல் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது குறித்த பதிவு தொடர்பில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

ராஜித்த சேனாரத்ன கொரோனாவுக்காக ஓரிலட்சம் ரூபாதான் தருவார். ஆனால் வௌ்ளை வான் முதலைகளுக்கு 20 இலட்சம் செலுத்தியிருக்கின்றார் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment