Saturday, March 21, 2020

கொரோனா... பாதிக்கப்பட்டோர் தொகை 77 ஆக உயர்வு!

தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 77 இனை எட்டியுள்ளது. இன்றைய தினம் (21) புதிதாக நோய் தொற்றுக்குள்ளான ஐவர் கண்டறியப்பட்டுள்ளனர்.

அநுராதபுர வைத்தியசாலைக்குள் அநுமதிக்கப்பட்டிருந்த ஆறுபேர் நோய்தொற்றுக்குள்ளாகியிருப்பதாக உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார். இவர்களைத் தவிர, சந்தேகத்திற்கிடமானோர் 245 பேரும் நாடளாவிய ரீதியில் 18 வைத்தியசாலைகளில் அநுமதிக்கப்பட்டுள்ளதாக ஆட்கொல்லி நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment