Monday, March 2, 2020

இரு பெண்பொலிஸார் 28 நாட்களாக காணாமல்போயுள்ளனர்.

முந்தலம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பெண் கொஸ்தாபல்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள காணாமல் போயுள்ள ஒரு பொலிஸ் பொஸ்தாபலின் தாயார்:

திருமணமாகாத எனது மகளை 28 நாட்களாக காணவில்லை. அவர் கடந்த ஜனவரி மாதம் 31 ம் திகதி இறுதியாக தன்னுடன் கடமைபுரியும் தோழி ஒருவருடன் வீட்டுக்கு வந்திருந்தார். இரு நாள் விடுமுறையில் நின்றுவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

எனது மகளுடன் விடுமுறையில் வந்த ஹொறவப்பொத்தான பிரதேசத்தை சேர்ந்த தோழியின் கணவரிடம் விசாரித்தபோது, அவரது மனைவியும் காணாமல் போயுள்ளதாக கணவர் தெரிவித்தார். இது தொடர்பாக முந்தலம் பொலிஸில் விசாரித்தேன். இரு நாள் விடுமுறை பெற்று சென்றவர் விடுமுறை முடிந்து 28 நாட்களாகியும் வேலைக்கு திரும்பவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மர்மம் தொடர்பாக பொலிஸ் திணைக்களம் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தல்களையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment