Sunday, February 9, 2020

முன்னாள் பிரதமர் இந்தியாவுடன் கைச்சாத்திட்டவற்றை நிராகரித்து மோடிக்கு செய்தி அனுப்பியுள்ளார் இன்றைய பிரதமர்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியவுடன் பல்வேறு விடயங்களில் தான்தோன்றித்தனமாக, தனது விருப்பிற்கேற்ப கைச்சாத்திட்டுள்ளார் என பல எதிர்ப்பலைகள் வந்தவந்த வண்ணமுள்ள நிலையில், இந்தியாவுடன் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட கைச்சாத்திடல்களை நிராகரித்து அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.

மத்தளை விமான நிலையம் தொடர்பிலும் திருகோணமலைத் துறைமுகத்தில் எண்ணய்வளம் இருப்பதற்கான ஆய்வு தொடர்பிலும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் முன்னாள் பிரதமர் இந்தியாவுடன் கைச்சாத்திட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'முன்னாள் பிரமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடந்து முன்னெடுக்க முடியாது என்றும், அதற்குத் தான் முழுமையான எதிர்ப்புத் தெரிவிப்பதுடன் அதனை நிராகரிக்கிறேன்' எனவும் கூறியிருப்பதாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment