Saturday, February 15, 2020

பிளவுகள் இன்றி நாம் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றியீட்டுவோம்! - மைத்திரி

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி நாங்கள் ஒன்றிணைந்து - பிளவுகள் மறந்து புதியதொரு கூட்டணியில் தற்போதைய ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவோம் எனக் குறிப்பிட்டார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இதற்கான பேச்சுவார்த்தைகளும் சிறப்பாக நிறைவேறியுள்ளன என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இடம்பெற்றநிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆதரவு நல்கக்கூடிய கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு நாங்கள் பொதுத்தேர்தலில் வெற்றயீட்டுவோம் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment