Saturday, February 29, 2020

றிசார்ட் களவெடுத்த பணம் எங்கே உள்ளது? சகோதரர் , மனைவியின் வங்கிக்கணக்குகளை ஆராய நீதிமன்று உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் சகோதரர் ஆகியோரது வங்கிக் கணக்குகள் சம்பந்தமான அறிக்கையை கல்கிஸை நீதவான் நீதிமன்றம் சமர்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சதொச மோசடி வழக்கு நீதவான் உதேஷ் ரணதுங்க முன்பாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் அமைச்சர் பதியூதீனின் மனைவியான கே.எம். ஆயிஷா மற்றும் அவரது தம்பியான ரியாஸ் பதியூதீன் ஆகியோரின் கணக்குகளே இவ்வாறு ஆராயப்பட்டு அறிக்கையிடப்படவுள்ளன.

No comments:

Post a Comment