Friday, February 21, 2020

காணாமல்போன பொலிஸ் கொஸ்தாபல் சடலமாக மீட்பு! தாயுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் மகன் கொன்றாரா?

கடவத்தைபிரதேசத்தில் கடந்த 16 ம் திகதி முதல் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்று பன்னல, வேரஹேர பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் கொஸ்தாபல் கொலை செய்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் பெயரில் இருவர் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3 பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டே அவரது சடலத்தை கண்டு பிடித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவில் இருந்ததாகவும், அப்பெண்ணின் கணவன் போதைப்பொருள் வழக்கொன்றுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இந்நிலையில் தனது தாயுடன் கள்ள உறவை மேற்கொண்ட கொஸ்தாபலை பெண்ணின் மகன் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment