Tuesday, February 11, 2020

சஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 61 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

நுவரெலியா உட்பட பல பகுதிகளிலும் தீவிரவாதி சஹ்ரான் நடத்திய ஆயுதப் பயிற்சி முகாம்களில் இவர்கள் கலந்துகொண்டனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் 61 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment