Sunday, February 9, 2020

மைத்திரியின் சகோதரனை ஐதேகவுக்குள் இழுப்பதற்கான கைங்கரியங்கள் மேடையேறுகின்றனவாம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இணைத்துக்கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி படாதபாடுபடுகின்றதாகத் தெரியவருகின்றது.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வாறு டட்லி சிறிசேனவை கட்சிக்குள் உள்வாங்குவதற்கு கட்சி உள்ளிடம் தயாராக இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி என்னதான் நினைத்தாலும், இன்னும் டட்லி சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வேண்டப்பட்ட அவருடன் மிக நெருங்கிய தொடர்புடன் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கனவு நனவாகுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.

No comments:

Post a Comment