Tuesday, February 11, 2020

கோட்டாபய ராஜபக்ஷ மூன்றில் இரண்டு எடுத்தே தீருவார் - மங்கள

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணியின் குறியீடு தொடர்பில் பிரச்சினைகள் தலைதூக்கினால் மீண்டும் கட்சியின் வெற்றி கேள்விக்குறியானதே. தொடர்ந்து இவ்வாறு கட்சிக்குள் குறியீடு தொடர்பில் பிணக்குகள் தலைதூக்கினால் தற்போதைய அரசாங்கத்திற்கே நன்மையாக அமையும். அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுவிடுவார்கள் என்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாங்கள் கூட்டணியாகச் சேர்ந்து போட்டியிட்டாலும் கூட கட்சியின் சின்னமாக யானைச் சின்னமே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குத் தலைசாய்க்காது, புதிய கூட்டணிக்கு புதிய சின்னமே வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றார் சஜித் பிரேமதாச. அவருக்கு ஆதரவாக நிறையப் பேர் நின்றிருந்தனர்.

பிணக்கு முற்றியதால் சஜித் தரப்பு அங்கிருந்து வெளியேறியதும், மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment