அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சுப்பதவியை ஏற்ற பின்பு பல புதிய தளபாடங்களை வாங்கியதாகவும் அதன்போது தனக்கு 06 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரை ஒன்றை கொள்வனவு செய்துகொண்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
ஆனால் இக்குற்றச்சாட்டு போலியானது என்றும் சேறடிக்கும் நோக்கம் கொண்டது என்றும் விமல் வீரவன்ச மறுத்துள்ளார்.
இது தொடர்வில் அவர் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளதாவது:
அமைச்சு பொறுப்பை ஏற்றது முதல் அமைச்சுக்கு இதுவரை எந்தவொரு தளப்பாடங்களும் கொள்வனவு செய்யவில்லை என்றும் அமைச்சர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி குற்றச்சாட்டுக்குள்ளான அதிசொகுசு நாற்காலி இதோ:
No comments:
Post a Comment