Thursday, January 9, 2020

ராஜித்த மகிந்தவின் வீட்டில்தான் ஒளிந்திருந்தார் என உறுதியாகச் சொல்கிறார் சந்திரிக்கா!

கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் வராந்து வழங்கப்பட்டிருக்கும் போது, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டில் ஒளிந்திருந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற விழாவொன்றின் பின்னர் ஊடகச்சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் டொரிங்டன் உத்தியோகபூர்வ இல்லத்தில் ராஜித்த சேனாரத்னவை ஒளித்து வைத்திருந்ததாக பலதரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

No comments:

Post a Comment