Sunday, January 12, 2020

மத்ரஸாக்கள் அனைத்தும் சமய கலாச்சார அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்! - பிரதமர்

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மத்ரஸாப் பாடசாலைகளும் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும், அந்த மத்ரஸாக்களில் கற்பிக்கப்படுகின்ற பாடத்திட்டம் தொடர்பில் ஒரு ஒழுங்குமுறையைக் கையாளுமாறு முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

புத்த சாசன மதவிவகார மற்றும்கலாச்சார அமைச்சின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment