Tuesday, January 14, 2020

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு!

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் கோப்ஸிட்டி முகாமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது முதல் அன்றைய அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு நன்கொடைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சில காலந்தாழ்த்தவும் படுகின்றன.

விசேடமாக இலவசமாக வழங்கப்படும் எனக்குறிப்பிடப்பட்ட உர மானியம் வழங்கப்படாதுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணிக்கான பத்திரமும் காலந்தாழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment