Wednesday, January 1, 2020

காணிப்பிணக்கை தீர்க்க பூநகரியில் லஞ்சம் வாங்கிய உத்தியோகித்தர் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுத்த ஒருவர் தனது தனது விடயத்தை காணி உத்தியோகத்தர் தீர்க்கவில்லை எனத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது

பூநகரி முழங்காவில் பிரதேசத்தில் நாச்சிக்குடா சந்தியில் வியாபார நிலையம் நடாத்திவருகின்ற ஒருவர் தனது காணி விடயம் தொடர்பில் பிரதேச செயலக காணி உத்தியோகத்தரை நாடியுள்ளார். காணி உத்தியோகத்தர் குறித்த காணிப் பிணக்கை தீர்ப்பதாக இருந்தால் தனக்கும், பிரதேச செயலாளருக்கும் பணம் தேவை என தெரிவித்துள்ளதாகவும், அதனடிப்படையில் 35 ஆயிரம் ரூபா காசோலை ஒன்றையும், 15 ஆயிரம் ரூபா பணத்தையும் காணி உத்தியோகத்தருக்கு வழங்கியிருக்கின்றார் ஆனால் காணி உத்தியோகத்தர் பணத்தை பெற்றுவிட்டு ஆறுமாதங்கள் கடந்தும் தனது காணி விடயத்தை தீர்க்கவில்லை எனத் தெரிவித்து குறித்த நபர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும், மத்திய மற்றும் மாகாண காணி ஆணையாளருக்கும் கிளிநொச்ச மாவட்ட அரச அதிபருக்கும் பிரதியிட்டுள்ளார்.


இலஞ்சம் கொடுப்பதும் தவறு வாங்கும் தவறு என்று சட்டம் கூறுகின்ற நிலையில் இலஞ்சம் வழங்கியவர் முறைப்பாடு செய்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இம்முறைப்பாட்டின் உண்மைத்தனைமையினை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளை பொது மக்கள் கோரியுள்ளனர்.


No comments:

Post a Comment