Tuesday, January 7, 2020

மகிந்தானந்தவை கொலை செய்ய ரணில் - ரஞ்சன் டீல்... கிழிந்தது முகத்திரை!

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான மகிந்தானந்த அழுத்கமகேவை கொலை செய்வதற்கு சென்ற அரசாங்க காலத்தில் நடந்த சதி தற்போது வெளிவந்துள்ளது.

அன்றைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ரஞ்சன் ராமநாயக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தற்போது வெளிவந்துள்ளது.

கைதவறி துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் குறிப்பிட்டு, மகிந்தானந்த அழுத்கமகேவை கொலைசெய்வதற்கு சதி தீட்டப்பட்டுள்ளமை அந்த ஒலிப்பேழை மூலம் தெரியவருகின்றது. அதற்காக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

பொலிஸ் மாஅதிபரும் தனக்கு ஆலோசனை வழங்கியதாக ரஞ்சன் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment