Monday, January 13, 2020

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்கிறார் பெசில்!

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு தயாராக இருப்பதாக இலத்திரனியல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்ற டிசம்பர் மாதம் முதலாவது வாரத்தில் பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் சென்ற காரணம், அமெரிக்காவிலுள்ள தனது குடியுரிமையை இரத்துச் செய்வதற்காக எனவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெசில் ராஜபக்ஷ போட்டியிடத் தயாராக இருப்பதனாலேயே அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்கின்றார் என மேலும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment