Sunday, January 5, 2020

ரஞ்சனின் பகிடி செல்லுபடியாகாது... அவரது இரகசியப் பேச்சுக்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இரகசியப் பொலிஸின் முக்கிய உறுப்பினராகக் கடமைபுரிந்த சானி அபேசேக்கர மற்றும் அவரது தொகுதியின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோருடன் உரையாடுகின்ற குரல் ஒலிப்பதிவுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சிங்களே அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் பேசிய ஒலிப்பதிவுகள் பற்றி எடுத்துக்காட்டப்பட்டன.

ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து கைப்பற்றிய குரல்பதிவுகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்திற்கும் மேல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment