Monday, January 6, 2020

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றி மைத்திரியிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில், அன்றைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் அதுதொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காக நாளை அல்லது நாளை மறுதினம் அழைக்கப்படவிருக்கின்றார்.

இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிரதி 'ஸெலிஸ்டார் ஜனரல்' திலிப் பீரிஸ் இதுபற்றித் தெரிவித்தார்.

குண்டுத்தாக்குதல் கருத்தினைத் தெரிவிப்பதற்கு இதுவரை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த தினம் ஒன்றை ஒதுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநர்களான அஸாத் ஸாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா போன்றோரின் கருத்துக்களைப் பதிவுசெய்வதற்காக நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றின் முன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் அடைவுபற்றி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கும்போதே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment