Sunday, January 5, 2020

ரணில் விட்டுக்கொடுப்பாரா? இல்லை சஜித் வேறு கூட்டணி அமைப்பாரா? முடிவு வெகுவிரைவில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை முடிவுசெய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று எதிர்வரும் புதன்கிழமை (08) நடைபெறவுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருபகுதியினர் நேற்று முன்தினம் (03) இரவு ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் ஒன்றுகூடி இந்தக் கூட்டம் நடாத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடாத்தியதாக உள்ளிடத்துச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்காது விட்டால், சஜித் பிரேமதாச தனியாகக் கூட்டணி அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி, ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் குழுக்கூட்டம் நடாத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment