Sunday, January 5, 2020

காவியுடை தரித்தோர் எனக்குச் சேறு பூசுகிறார்கள்.... மகா சங்கத்தினருக்கு மீண்டும் வாயுதை மங்களவினால்!

அரச ஊடகங்களின் மூலம் தனக்குச் சேறுபூசுவதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர குறிப்பிடுகின்றார்.

தனது டுவிட்டார் கணக்கின் மூலமாக அவர், 'காவியுடை தரித்த மனிதர்கள்' தன்மீது தாக்குதல் நடாத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற காலப்பகுதியிலும் மகா சங்கத்தினர் தொடர்பிலும் மங்கள சமரவீர பல்வேறு கருத்துக்களை முன்வைத்துடன், அவை சஜித் பிரேமதாசவின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.


No comments:

Post a Comment