Wednesday, January 15, 2020

அஸர்பைஜானில் இறந்த மாணவியரின் உடல்கள் இன்று இலங்கைக்கு...

அஸர்பைஜானில் இறந்த இலங்கை மாணவியர் மூவரினதும் உடல்களைத் தாங்கி, விமானம் இன்று (15) மு.ப. 9.20 இற்கு இலங்கை வந்து சேரும்.

கட்டார் விமானச் சேவைக்கு உரித்தான விமானத்திலேயே அந்த உடல்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. அஸர்பைஜான் பாக் நகரத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கீழ் மாடியில் ஏற்பட்ட தீயின் மூலம் வெளிவந்த நச்சுப் புகையை உட்கொண்டதன் மூலமே இவர்கள் மூவரும் இறந்துள்ளனர்.

No comments:

Post a Comment