Thursday, January 2, 2020

மோடியிடமிருந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தொலைபேசி அழைப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் சார்பாகவும், இந்தியப் பிரதமர் என்ற முறையிலும் தான் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி உரையாடலின்போது இந்தியாவுடன் தற்போது கொண்டுள்ள தொடர்பை மேலும் வலுவுள்ளதாக மாற்றுவோம் என இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இருவரும் மோடியிடம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment