Wednesday, January 1, 2020

ஜனாதிபதியின் வாக்குறுதிக்கேற்ப இன்றுடன் வரிகள் சலுகைகக்குட்படுகின்றன!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டத்திற்கேற்ப, பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அனைத்து வரிச் சலுகைகளும் இன்றுடன் நடைமுறைக்கு வரும் என, அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகின்றார்.

"ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்பே அறிவிக்கப்பட்ட வரி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் அனைத்தும் நடைமுறைக்கு வரும். உதாரணத்திற்கு பொருளீட்டும்போது செலுத்த வேண்டிய வரி இல்லை. நிறுத்தி வைக்கும் வரி இல்லை. வட் வரி 8% மட்டுமே. குறிப்பிடப்பட்ட மற்ற அனைத்து வரி சீர்திருத்தங்கள் மற்றும் வரி நிவாரண திட்டங்கள் 1 முதல் தொடர்ந்து செயல்படும்” என்றார்.

அவர் நேற்று (31) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்படி, மாதத்திற்கு ரூ 100,000 க்கு மேல் சம்பாதிக்கும் மக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி இரத்து செய்யப்படும், மேலும் ரூ. 250,000 மேலதிகமாக உழைப்பவர்கள் வரிக்குள் உள்ளீர்க்கப்படுவர்.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி மீதான 5% நிறுத்திவைக்கும் வரி இரத்து செய்யப்பட்டுள்ளது.

வணிகங்களுக்கான வட் வரம்பு காலாண்டில் ரூ .75 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காலாண்டுக்கு ரூ .75 மில்லியனுக்கும் குறைவான பண விநியோகம் செய்யும் வணிகர்களிடமிருந்து வட் நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment