Wednesday, January 1, 2020

பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர அரசியல் யாப்புதிருத்தத்தை கொண்டுவருகின்றார் ராஜபக்ஷ!

19 ம் அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் பல பறிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடயம். இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ அரசியல் யாப்பு திருந்த முன்மொழிவுகளை கொண்டுவருகின்றார்.

21 , 22 என பெயரிடப்பட்டுள்ள இத்திருத்தங்களுடாக ஜனாதிபதி பாதுகப்பு அமைச்சராக செயற்பட முடிவதுடன் மேலும் அமைச்சுக்களை அவர் விரும்பினால் வைத்துக்கொள்ளவும் யாப்பு இடம்கொடுக்கின்றது.

19 வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுப்பதற்காக இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.

இந்த இரண்டு மசோதாக்களும் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பிரேரணையின் பேரில், இருபத்தோராம் மற்றும் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்த மசோதாக்களாக வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஜனாதிபதி ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு சில அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி வகிக்க முடியும்.

பத்தொன்பதாம் திருத்தத்தின்படி, பிரதி மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சுகளின் எண்ணிக்கை 40 ஐ தாண்டக்கூடாது.

ஆனால், எம்.பி. விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்த இருபத்து இரண்டாவது திருத்தத்தின்படி, பிரதி மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஐ தாண்டக்கூடாது.

பத்தொன்பதாம் திருத்தத்தின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், புதிய திருத்தங்களின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதி உச்சநீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்க முடியும். இதற்காக ஜனாதிபதி தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

புதிய திருத்தத்தின்படி, சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம், பொலிஸ் மாஅதிபர், நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் நாயகம் (ஒம்புட்ஸ்மேன்) மற்றும் பாராளுமன்ற பொதுச்செயலாளர் ஆகியோரின் நியமனம் அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்படும்.

அந்த நியமனங்கள் பிரதமரிடம் கேட்கப்பட்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும். மேலும், விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்த 21 ஆவது திருத்தத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறித்த தேர்தல் தொகுதிக்காக பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிந்துகொள்ள வேண்டியது முழு வாக்குகளில் எட்டில் ஒரு பங்கிற்காகு மேலாகும்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் படி, மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளைப் பெறும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அந்தந்த வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு தகுதியற்றதாகின்றது.

விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த 21 ஆவது மற்றும் 22 ஆவது திருத்தச் சட்டம் சென்ற 27 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியில் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான விஜித்த ஹேரத் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது: விஜயதாச ராஜபக்ஷவினால் கொண்டுவரப்படவுள்ள திருத்தச் சட்டங்கள் முழுமையாக கோத்திரவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றது. அவர் சொல்கின்ற 21 ஆம் 22 ஆம் திருத்தச் சட்டங்கள் மீண்டும் 18 ஆவது அரசியல் யாப்பு அதிகாரங்களின்பாலே தள்ளப்படுவதாக உள்ளது. ஜனாதிபதியிடம் தற்போது இல்லாத சில அதிகாரங்களை மீண்டும் அவருக்கு வழங்கவே அவர் முயற்சி செய்கின்றார். பிரதமரும் ஜனாதிபதியும் கலந்தாலோசித்து தமக்குத் தேவையான முறையில் நியமனங்களை எதேச்சையாக வழங்குவதற்கு அவரால் முன்வைக்கப்படவுள்ள திருத்தச்சட்டங்கள் உதவிபுரிகின்றனவே தவிர, அதனால் எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, அவரால் முன்வைக்கப்படவுள்ள திருத்தச் சட்டங்கள் தொடர்பில் முழுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment