Wednesday, January 29, 2020

சீனாவில் உயர் கல்விக்குச் சென்ற மாணவர்களில் இன்றும் 93 மாணவர்கள் இலங்கை திரும்பினர்.

சீனாவிற்கு உயர் கல்வி கற்பதற்காக சென்றிருந்த இலங்கை மாணவர்களை சீனாவிலிருந்து விமானம் மூலம் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அனுப்பி வைத்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதர் கே.கே.யோகானந்தா தெரிவித்தார்.

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகச் சீனாவிலிருந்து 93 இலங்கை மாணவர்களை அவசரமான நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த அவர். இதுவரையில் மொத்தமாக 380 இலங்கை மாணவர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்

மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந் நடவடிக்கையினை முன்னெடுள்ளதாகவும்இ நிலைமை வழமைக்கு திரும்பியவுடன். நாடு திரும்பிய மாணவர்கள் மீண்டும் தங்களின் உயர் கல்வியை தொடர முடியும் எனவும் அவர் மேலும்.தெரியவருகிறது.

No comments:

Post a Comment