Tuesday, January 7, 2020

ஈரான் இராணுவத் தலைவரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட 35 பேர் மிதியுண்டு இறப்பு!

ஈரான் இராணுவத் தலைவரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டோரில் 35 பேர் சன நெரிசல் காரணமாக மிதிபட்டு இறந்துள்ளனர்.

ஈரானின் கர்மான் எனும் கிராமத்தில் இந்த இறுத்திக் கிரியை நிகழ்வு இடம்பெற்றது. ஜெனரல் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தோரில் 48 பேர் மிதிபட்டு காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனரல் காஸிம் ஸுலைமான் ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராவார். ஐக்கிய அமெரிக்கக் குடியரசு ஸுலைமானை பயங்கரவாதியாகவும் அமெரிக்க இராணுவத்திற்கு தலையிடியானவராகவும் கண்டுகொண்டது.

அமெரிக்கா ட்ரோன் விமானத்தைப் பயன்படுத்தி சென்ற வெள்ளிக்கிழமை (3) மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் ஜெனரல் ஸுலைமான் காலமானார்.

No comments:

Post a Comment