Sunday, January 5, 2020

சுதந்திரக் கட்சியின் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கும் 07 ஆம் திகதி கொழும்பிற்கு வருமாறு அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதி அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

அங்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் முறை பற்றியும் இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடாத்தப்படவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment