Saturday, December 28, 2019

பொதுத்தேர்தலில் போட்டியிடுவேன்.. கோட்டாவுக்கு மூன்றில் இரண்டு பெற்றுக்கொடுப்பேன்! மைத்திரி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வார இறுதி 'லங்காதீப' பத்திரிகையில் இடம்பெற்றுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒன்றிணைந்து அமைக்கவுள்ள பரந்துபட்ட கட்சியிலிருந்தே போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மக்களின் ஆசிர்வாதத்துடன் தான் பாராளுமன்றம் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ், மிகவும் சிறப்பாக ஆட்சி நடைபெறுகின்றது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை அவருக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக முழுமையாக தன்னை ஈடுபடுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment