Monday, December 23, 2019

இனி தன்னிச்சையாக வெளிநாட்டு ஒப்பந்தங்கள் முடியவே முடியாது - வெளிவந்துள்ளது சுற்றறிக்கை

அமைச்சர்கள், மாகாண மற்றும் அரச நிறுவனங்கள், அரச நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முதலீடு செய்யும் நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கம் அல்லாத அமைப்புக்கள், தூதுவராலயங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முயல்வது தடைசெய்யப்பட்டுள்ளமைக்கான சுற்றறிக்கையொன்றை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிச் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடனான அச்சுற்றறிக்கையை உடன் செயற்படுத்துமாறும் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வதாயின் உரிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி செயலகம் வெளியுறவு, நிதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு அமைச்சினது அல்லது நிறுவனத்தினது நோக்கம் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சின் தேசிய திட்டமிடல் துறையின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com