Saturday, December 28, 2019

ராஜித்த தலைமறைவாகவில்லை... பொலிஸாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை!

கைதுசெய்வதற்காக வராந்து வழங்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பொலிஸாரை ஏமாற்றி மறைந்திருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன குறிப்பிடுகின்றார்.

ராஜித்த சேனாரத்ன கடும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் அவருக்கு இருதய சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

எந்தவொரு குற்றத்தையும் நீதிமன்றத்தின் முன் நிரூபிக்க முடியும் எனவும், அதற்கேற்ப செயற்பட்டு தண்டனை வழங்குவதே முறை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களின் முன் பேசும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment