Saturday, October 12, 2019

சிறிதரனின் சகாவான பாலியல் பலாத்கார குற்றவாளியை விடுவிக்க சுமந்திரன் செய்த வேலை தெரியுமா?

தெருவால் சென்ற சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்காக பற்றை ஒன்றுக்குள் இழுத்துச் செல்கையில் சிறுமி சத்தமிட்டதை தொடர்ந்து, ஊர் மக்கள் திரண்டபோது தப்பியோடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கயவனும் சிறிதரனின் சகாவுமாகிய ஒருவன் சிறுமியால் அடையாளம் காட்டப்பட்டதன் பிரகாரம் பொலிஸார் கைது செய்துசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தான்.

சிறுவர் துஷ்பிரயோகம் , கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு பிணைவழங்குவது மிகவும் அரிது என்பதுடன் விசேட காரணங்களின் அடிப்படையிலேயே அவ்வாறு பிணை வழங்கப்படும் என்பதும் பொலிஸார் பிணை வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பர் என்பதும் யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் சுமார் மூன்று நாட்களே விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கயவன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவனுக்கு பிணைவழங்குவதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவிக்க வில்லை. இதற்கான காரணம் தமிழ் தேசியக் வழக்கறிஞர் மதியாபரணம் சுமந்திரன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியில் அழைந்து அழுத்தம் கொடுத்தமையே காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் கிளிநொச்சியின் கட்டப்பஞ்சாயத்து ராஜா தற்போது பிறேமதாஸவின் மகனுக்காக வன்னியெங்கும் வாக்கு தேடி வருகின்றார். அதன்பிரகாரம் அண்மையில் புலிகளின் முதலாவது பெண்போராளி என்று சொல்லப்படுகின்ற மாலதியின் நினைவஞ்சலி நிகழ்வு நடந்தபோது அங்கு சஜித்திற்கு வாக்கு கேட்டுச் சென்ற கட்டப்பஞ்சாயத்து தலைவன் சிறிதரன் , மேற்படி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட தனது சகாவையும் கூடவே கூட்டிச் சென்றுள்ளான்.

குறித்த பாலியல் துஷ்பிரயோகியை அங்கு கண்ட மக்கள் புலிகளின் முதலாவது போராளியின் நினைவு நிகழ்வில் இவ்வாறானதோர் சமூகவிரோதியா என தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

நிகழ்வு ஆரம்பமானபோது கிளிநொச்சி கட்டப்பஞ்சாயத் தலைவனின் வலது பக்கத்தில் உட்காந்திருந்த குறித்த காமுகனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதை உணர்ந்ததை தொடர்ந்து அவன் தனது ஏஜமானுக்கு அருகிலிருந்து எழுந்து சென்று பின்வரிசையில் உட்காந்திருப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.

No comments:

Post a Comment