வடக்கு கிழக்கு பாதுகாப்புப் பிரிவினர் வசமிருக்கின்ற இடங்களை பெற்றுத்தருவது மற்றும் அம்மாகாணங்களுக்கு வெவ்வேறாக அதிகாரங்கள் வழங்கப்படும் எனக்கூறுகின்ற வேட்பாளர் எவரோ அவருக்கே ஜனாதிபதித் தேர்தலின்போது எமது வாக்குகள் அளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான கடப்பாடை பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலவேளை தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குக் கருத்துரைத்துள்ளமையே, சஜித் பிரேமதாச இத்தீர்மானத்தினை எடுப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான கடப்பாடை பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலவேளை தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்குக் கருத்துரைத்துள்ளமையே, சஜித் பிரேமதாச இத்தீர்மானத்தினை எடுப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment