Monday, October 14, 2019

மொட்டு ஜெயிக்கும்! எங்கள் ஆதரவு கோத்தபாய ராஜபக்சவிற்கே.. வியாழேந்திரன்

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தாங்கள் பூரணமான ஆதரவை வழங்குவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ( புளொட் ) பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அறிவித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் மேற்கொண்டுள்ள பாரிய அபிவிருத்தி பணிகள் காரணமாக தமிழ் மக்கள் கௌரவ கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களிப்பார்கள். நிச்சயமாக மொட்டு வெற்றிபெறும்..

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment