Sunday, October 6, 2019

வேட்பாளர் மனுவில் கையெழுத்திட்டார் கோத்தபாய ராஜபக்ச!

இலங்கையின் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு கோத்தபாய ராஜபக்சவிற்கு ஏற்படுத்த முயற்சிக்கப்பட்ட அத்தனை தடைகளையும் தாண்டி நேற்று அவர் வேட்பாளர் மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெருமுனவின் வேட்பாளராக தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக மிரிஹானைப் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மஹிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பௌத்த தேரர்களின் சமய அனுஷ்டானங்கள் மற்றும் ஆசீர்வாதத்துடன் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மட்டக்களப்பிலிருந்து வியாழேந்திரனுடன் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment