Friday, October 4, 2019

தேர்தலில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வது குறித்த தீர்ப்பு இன்று மாலை வெளிவரவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் நோக்குடன், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் அந்த கூட்டமைப்பின் செயலாளர் சுமித் விஜேசிங்க, சமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், நாடாளுமன்ற சபாநாயகராக கடமையாற்றிய அவர், தற்போது ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவராக விளங்குகின்ற அவர், தற்போது நாட்டில் காணப்படுகின்ற பரபரப்பு சூழ்நிலைக்கு மத்தியிலேயே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment