Friday, October 11, 2019

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீடிப்பு

மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணம் தொடர்பில் விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் நீடித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது, 33.9 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு புவனேக அலுவிஹாரே, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர உள்ளிட்ட மூவரடங்கிய நீதியசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விசேட மேல் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment