Wednesday, October 2, 2019

ஜனாதிபதியானால் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவாராம்! - சஜித் பிரேமதாச

தான் ஜனாதிபதியானால் தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை நாட்டின் வறுமையை நீக்க வழங்குவேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

கொழும்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று (02) நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

"இந்நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர், ஜனாதிபதியாக தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் அனைத்து கொடுப்பனவுகளையும் இந்நாட்டு மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக நன்கொடையாக வழங்கி ஒரு வலிமையான பொது வாழ்வை அனைத்து மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தார்.

பொதுமக்களின் துன்பங்களை நன்கு அறிந்த அவர்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்வினை ஆட்சியாளர்கள் வாழ்வதாக தெரிவித்த அவர், அனைத்து தரப்பினருக்கும் ஒரு முன்னுதாரணமான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சரவை அமைச்சரான அதாவுத செனவிரத்ன, முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

No comments:

Post a Comment