Wednesday, October 16, 2019

சிங்கள பெளத்தர்களினால்தானா ஜனாதிபதிகள் உருவானார்கள்... இல்லவே இல்லை! - ஹேஷா

சிங்கள பெளத்தர்களின் வாக்குகளினால் மாத்திரம் இந்நாட்டில் எந்தவொரு ஜனாதிபதியும் பதவியில் அமரவில்லை. இனிமேலும் அவ்வாறுதான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக சிறுபான்மையினரின் வாக்குகள் மிக மிக அவசியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றும்போதே அவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதற்காக சிறுபான்மையினரின் வாக்குகளைப்பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு அளுத்கம பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளினால் சென்ற அரசாங்கம் தோல்வியடைந்தது. அதைப்போல தற்போதும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்காக முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment