Thursday, October 10, 2019

155 வேட்பாளர்கள் போட்டியிடும் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நாளை!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (10) முற்பகல் எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபை முன்றலிலிருந்து ஆரம்பமானது.

நாளை (11) நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்களர்களின் எண்ணிக்கை 53, 384 ஆகும்

17 தேர்தல் வலயங்களில், 47 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் 5 தேர்தலில் போட்டியிடவுள்ளன.வேட்பாளர்கள் 155 பேர் போட்டியிடும் இத்தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்காக 28 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment